இந்நிலையில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுத்தல், வங்கிகள் இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. ஆனால் தொழிற்சங்கம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய இணையமைச்சர் உறுதிமொழி எதுவும் வழங்கவில்லை. இதுபற்றி கூட்டறிக்கை வெளியிட்ட தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு