ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் வன்முறை நிகழ்ந்த போது பதற்றத்தில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வன்முறை சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. அங்கிருந்த பேராசிரியர்களும், மாணவர்களும் தாக்கப்பட்டது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சபர்மதி விடுதிக்குள் புகுந்து கண்ணாடி கதவுகளை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.